×

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்..!!

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (90) வயது மூப்பு காரணமாக இன்று காலை 10.30 மணி அளவில் சென்னையில் காலமானார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன்
1953-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஐ.சண்முகநாதன். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர்.

சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன். சமூக மேம்பாட்டுக்காக பங்காற்றியமைக்கான கலைஞர் எழுதுகோல் விருதை ஐ.சண்முகநாதன் 2022-ல் பெற்றார். 20-ம் நூற்றாண்டு வரலாறு, உலக வரலாறு, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை ஐ.சண்முகநாதன் எழுதியுள்ளார். நாதன் என்ற பெயரில் ஏராளமான நாவல்களையும் எழுதியுள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள இல்லத்தில் ஐ.சண்முகநாதன் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

The post மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : I. Shanmuganathan ,Chennai ,Tiruchirappalli district ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்...